குறுந்தொகை - 99. முல்லை - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
அவ்வையார்.