குறுந்தொகை - 368. மருதம் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
மெல்லிய லோயே மெல்லிய லோயே
நன்னாண் நீத்த பழிதீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பிற்
சொல்ல கிற்றா மெல்லிய லோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத்
திண்கரைப் பெருமரம் போலத்
தீதில் நிலைமை முயங்குகம் பலவே.
- நக்கீரனார்.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
- நக்கீரனார்.
‹‹ முன்புறம் |
‹‹ முன்புறம் |