குறுந்தொகை - 175. நெய்தல் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி
உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்
கிரங்கேன் தோழியீங் கென்கொ லென்று
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங் கமைக அம்பல தெவனே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
உலோச்சனார்.