குறுந்தொகை - 261. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
கழார்க் கீரனெயிற்றியார்.