குறுந்தொகை - 82. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு
அழாஅல் என்றுநம் அழுதகண் துடைப்பார்
யாரா குவர்கொல் தோழி சாரற்
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி அவரை பூக்கும்
அரும்பனி அச்சிரம் வாரா தோரே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
கடுவன் மள்ளனார்.