குறுந்தொகை - 141. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
செல்கென் றோளே அன்னை எனநீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மதுரைப் பெருங்கொல்லனார்.