குறுந்தொகை - 269. நெய்தல் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
சேயாறு சென்று துனைபரி யசாவா
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல
வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும்
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்புவிளை கழனிச் சென்றனள் இதனால்
பனியிரும் மரப்பிற் சேர்ப்பற்
கினிவரி னெளியள் என்னும் தூதே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
கல்லாடனார்.