குறுந்தொகை - 330. மருதம் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத்
தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட
நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணமில கமழும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
கழார்க் கீரனெயிற்றியனார்.