குறுந்தொகை - 188. முல்லை - தலைவி கூற்று
ADVERTISEMENTS
முகைமுற் றினவே முல்லை முல்லையொடு
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்.