குறுந்தொகை - 297. குறிஞ்சி - தோழி கூற்று
ADVERTISEMENTS
அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர்
வைவார் வாளி விறற்பகை பேணார்
மாறுநின் றிறந்த ஆறுசெல் வம்பலர்
உவலிடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப்
புணர்ந்துடன் போதல் பொருளென
உணர்ந்தேன் மன்றவவர் உணரா வூங்கே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.