குறுந்தொகை - 259. குறிஞ்சி - தோழி கூற்று
ADVERTISEMENTS
மழைசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத்
தருவி யார்ந்த தண்ணறுங் காந்தள்
முகையவிழந் தானா நாறு நறுநுதல்
பல்லிதழ் மழைக்கண் மாஅ யோயே
ஒல்வை யாயினுங் கொல்வை யாயினும்
நீயளந் தறிவைநின் புரைமை வாய்போற்
பொய்ம்மொழி கூறல தெவனோ
நெஞ்ச நன்றே நின்வயி னானே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பரணர்.