குறுந்தொகை - 94. முல்லை - தலைவி கூற்று
ADVERTISEMENTS
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே
மானே மருள்வேன் தோழி பானாள்
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலை தத்தக்
கருவி மாமழைச் சிலை தருங் குரலே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
கதக்கண்ணனார்.