குறுந்தொகை - 12. பாலை - தலைவி கூற்று
ADVERTISEMENTS
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவர் தேர் சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ஓதலாந்தையார்.