குறுந்தொகை - 226. நெய்தல் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
பூவொடு புரையுங் கண்ணும் வேயென
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென
மதிமயக் குறூஉ நுதலு நன்றும்
நல்லமன் வாழி தோழி அல்கலும்
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
குருகென மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார்.