குறுந்தொகை - 354. மருதம் - தோழி கூற்று
ADVERTISEMENTS
நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
கயத்தூர்கிழார்.