குறுந்தொகை - 78. குறிஞ்சி - பாங்கன் கூற்று
ADVERTISEMENTS
பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
நக்கீரனார்.