குறுந்தொகை - 216. பாலை - தலைவி கூற்று
ADVERTISEMENTS
அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே
யானே, தோடார் எல்வளை ஞெகிழ ஏங்கிப்
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே
அன்னள் அளியள் என்னாது மாமழை
இன்னும் பெய்ய முழங்கி
மின்னுந் தோழியென் இன்னுயிர் குறித்தே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.