குறுந்தொகை - 80. மருதம் - பரத்தை கூற்று
ADVERTISEMENTS
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம தயர்கம் சேறும் தானது
அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
அவ்வையார்.