குறுந்தொகை - 272. குறிஞ்சி - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட
வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த
நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த
புன்கண் மடமா னேர்படத் தன்னையர்
சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக்
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகொண் டன்ன வுண்கண்
நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ஒருசிறைப் பெரியனார்.