குறுந்தொகை - 160. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இதோ தோழிநங் காதலர் வரவே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மதுரை மருதனிள நாகனார்.