குறுந்தொகை - 8. மருதம் - காதற் பரத்தை கூற்று
ADVERTISEMENTS
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ஆலங்குடி வங்கனார்.