குறுந்தொகை - 347. பாலை - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்
குமரி வாகைக் கோலுடை நறுவீ
மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்
கான நீளிடைத் தானு நம்மொடு
ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின்
நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணனார்.