குறுந்தொகை - 158. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை
ஆரளி யிலையோ நீயே பேரிசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணையிலர் அளியர் பெண்டிர் இதெவனோ.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
அவ்வையார்.