குறுந்தொகை - 133. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை
கிளிகுறைத் துண்ட கூழை யிருவி
பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென்
உரஞ் செத்தும் உளெனே தோழியென்
நலம்புதி துண்ட புலம்பி னானே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.